Seal Team Six
அமெரிக்காவின் சிறப்பு போர் மேம்பாட்டுக் குழுவின் ஒரு ரகசியப் பிரிவுதான் இந்த ”சீல் டீம் சிக்ஸ்”(SEAL-SEa,Air,Land).பல விதமான நெருக்கடி சூழ்நிலைகளை இந்த குழு சந்தித்திருந்தாலும் அவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடித்தது மற்றும் சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்றுவிட்டு இரு பணயக் கைதிகளை மீட்ட சம்பவங்கள்தான்.
சீல் டீம் சிக்ஸ் பின்லேடனை பிடிப்பதற்கு முன்பு பின்லேடன் தங்கியிருந்த ஒரு மாதிரி வீட்டை கட்டி நூறு முறைகளுக்கும் மேலான சாத்தியக்கூறுகளை(Probability) உருவாக்கி பயிற்சிகள் எடுத்துக்கொண்டனர்.பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் சீல் டீமின் சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகே அந்த நாட்டின் அரசுகளுக்கு தெரிய வந்திருக்கிறது.
சீல் டீமில் சேர்பவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.தொடர்து மூன்று நாட்கள் ஓய்வின்றி கடுமையான பயிற்சி,கடும்குளிர் வீசும் கடல் நீரில் பல மணி நேரங்கள் இருத்தல்.அதிக பளுவை வெகுநேரம் தூக்கி வைத்திருப்பது என பல கடுமையான பயிற்சிகள் இருக்கும்.
சீல் டீமில் வேலை செய்பவர்கள் யார் யார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.அந்த குழுவில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு கூட அவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது தெரியாது.வருடத்தில் 300 நாட்களுக்கும் மேல் வீட்டிற்கே வராமல் இருக்கும் இவர்களில் 90%
சதவிகிதம் பேருக்கு சீக்கிரம் விவாகரத்து நிகழ்ந்து விடுகிறது.
சீல் டீம் என்ற பெயரே முன்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.அதற்கு முன் வேறு ஒரு போலி பெயரில் இவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.
No comments:
Post a Comment