ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம்
வந்துவிடுகிறது. அப்படி ஏமாற்றுபவர் பல நாட்களாக நம்மை ஏமாற்றிக்
கொண்டிருந்தால் கொலை வெறியே வந்துவிடும். அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால்
எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை
ஏமாற்றியிருக்கிறான். நம்மை என்றால் நம் இனத்தை மட்டும் அல்ல, நம் நாட்டை
மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான்.
அவன் ஏதோ ஒரு சின்ன விடயத்தை வைத்து நம்மை ஏமாற்றி
விடவில்லை. தான் ‘உயிருடன் இல்லை’ என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியிருக்
கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்திருக்கிறான். அவன்
ஒரு சாதாரன மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை.
சரி, அவன் ஒரு நாட்டின் தலைவன், பிரபலமானவன் என்ற மட்டிலும்
இருந்திருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், 20ம்
நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன். கொல்லப்பட
வேண்டியவன் என்று அஹிம்சையில் நம்பிக்கை உள்ளவர்களால் கூட நினைக்கப்பட்டவன் அவன்.
கடந்து வந்த வரலாற்றுத் தடங்களில், விடை சொல்ல முடியாத
பல மர்மங்கள், கருப்புத் தீவுகளாக இப்போதும் நம்மிடையே படிந்து
காணப்படுகின்றன. விடை தேடி, விடைகள் கிடைக்கப்படாமல் மர்மங்களாகவே அவை
தம்மை ஒரு கூட்டுக்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றன. எந்த ஒரு கேள்விக்கும்
மிகச் சரியாக, ஒரே ஒரு விடைதான் இருக்க முடியும். அது போல எந்த ஒரு
மர்மத்துக்கும் தீர்வாக இருப்பதும் ஒரே ஒரு விடைதான். ஆனால் சரியான விடை
தெரியாத பட்சத்தில், பல விடைகளை அந்த மர்மத்தின் தீர்வாக நாமே பொருத்திப்
பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி வரலாற்றில் உண்மை
என்பது, எங்கோ ஒரு மூலையில் நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே
இருக்கின்றது.
உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள், இந்த
வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப்பட்டு இருக்கின்றது. இவர்களின்
பெயர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் குறிப்பாகச் சொல்லப்படும்