January 10, 2013

சிம்பன்ஸி குரங்குகள்-சில உண்மைகள்


   
உலகில் உள்ள விலங்குகளில் சிந்த்திக்கும் திறனில் மிகச்சிறந்தவையாக இரண்டு விலங்குகள் உள்ளது.
முதலாவதாக மனிதன் இரண்டாவதாக சிம்பன்ஸிக்கள்.

குரங்குகளில் சிம்பன்ஸிக்கள் மனித இனத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது. இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.

சின்பன்ஸிகள் அன்பு மற்றும் பாசத்துக்குக் கட்டுப்பட்டவை. அன்பானவர்களை பிரிந்தால் மனிதர்கள் மிகவும் வருந்துவார்கள். இந்த உணர்வுக்கு சிம்பன்ஸிகளும் சளைத்தவை கிடையாது.

சிம்பன்ஸிக்களின் அறிவுத்திறனுக்கு உதாரணமாக,ஒரு விதையினை ஒரு கல்லை கொண்டு சரியான அளவு அழுத்தம் கொடுத்து விதையில் உள்ள பருப்பு உடையாமல் ஓட்டை மட்டும் சரியாக உடைப்பது,எறும்பு புற்றில் ஒரு நீண்ட குச்சியினை வைத்து, அதில் எறுப்ம்புகள் ஏறியவுடன் அப்படியே உண்பது போன்றவை.

வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் சிம்பன்ஸிக்கள் டிவி சேனலை மாற்றுவது, ஓவியம் வரைவது,என இன்னும் பலவற்றை சொல்லலாம்.



இவ்வளவு அறிவுள்ள சிம்பன்ஸிக்கள் இதே அளவு ஆபத்தும் உள்ளது.
சிம்பன்ஸிக்கள் மனிதர்களைப்போலவே நாம் அவர்கள் என்று அணி அணியாக வாழ்பவை.

எதிரணியில் உள்ள குரங்குகளை தாக்க செல்லும்போது இவை சத்தமின்றி ராணுவத்தைப்போல வரிசைகட்டி செல்வது ஆச்சரியமான ஒன்று.

எதிரணியில் உள்ள ஒரு சிம்பன்ஸி இவைகளிடம் சிக்கினால் அவ்வளவுதான்,,மிகக்கொடூரமாக தாக்கி கை கால் மற்றும் விறைகளை பிய்த்து கொடூரமாக கொலை செய்யும்
.

இதற்கு காரணம் இவற்றிற்கு இந்த கொல்லும் விளையாட்டில் கிடைக்கும் மனமகிழ்ச்சியே காரணம்
.
                                                    
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் சிம்பன்ஸிக்கள் சில நேரம் வளர்ப்பாளரையே கொடூரமாக தாக்கிய சம்பவங்களும் உண்டு.எனவே இந்த கொடூர செல்லப்பிராணியை வளர்க்க தனி தைரியம் வேண்டும்.


















பொதுவாக செல்லபிராணிகள்,குரங்குகள்,போன்றவை மனிதர்களை தாக்குவதற்கு காரணம்,அவை சிறுவயதில் அதன் சூழல் மற்றும் குடும்பத்தில் இருந்து பிரித்துவரப்பட்ட நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணாமக அமைகிறது.

இந்திய யானைகளில் இது அதிகமாகவே காணப்படுவது உண்மை.

No comments:

Post a Comment