January 7, 2013

டீன் மெச்சூரிட்டியும் சமூக குற்றங்களும்-ஒரு பார்வை

இன்றைய சூழலில் 12 வயதில் உள்ள ஒரு டீன் ஏஜ் சிறுவன்/சிறுமி பெரியவர்களுக்கே உரிய மெச்சூரிட்டியை கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு அவர்கள் கொண்டுள்ள இந்த குணங்களால் அவர்களுக்கு நன்மைதானா என்றால் நிச்சயமாக இல்லை!

அந்த மெச்சூரிட்டி மைண்ட்’டை அவர்களால் கையாள இயலாதபோதுதான் பாலியல்,திருட்டு,கொலை போன்ற குற்றங்கள் நடைபெறுகிறது காரணம்!

நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம், இந்த நூற்றாண்டில் பிறந்த குழந்தைகள் அதன் 2 அல்லது 3 வயதை எட்டுபோது அது ஒரு பெரிய மனிதனை போல் பேசுவதும்,கோபம் வந்தால் பொருள்களை தூக்கி உடைப்பதும்,
வீட்டை விட்டு வெளியேறுவதும் பொதுவாக பார்க்க வேண்டிய விஷயமில்லை! பெற்றோர்கள் இதைப்பார்த்து சந்தோஷப்படுவதுதான் உச்சகட்ட கொடுமை!

அந்த குழந்தை வளர வளர அதன் மனதில் இந்த உணர்சிகள் ஒரு அனிச்சை செயல்போல பதிவாகி அக்குழந்தை வளர்ந்ததும் அதே போல் நடந்து கொள்கிறது!

டீன் ஏஜ்’ஜில் என்னதான் மெச்சூர் ஆக இருந்தாலும் அதை சரியான பாதையில் வழிநடத்த தவறுவது சமூக குற்றங்களில் மாணவர்களை ஈடுபட வைக்கிறது.

சிறுவர் குற்றங்களில் பெரும்பாலும் மாணவர்களின் பெயர் அடிபடுவது நம் கல்வி முறையின் கையாலாகாத்தனமாகவே தோன்றுகிறது.!

சட்டங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் இந்த அடிப்படை விஷயங்களை கவனித்து நடவடிக்கை எடுக்காமல் போனால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை!

கோபத்தில் கொலை செய்த பின் தண்டனை வாங்கி தருவது ஒன்றும் சிறப்பு அல்ல.!
கோபமே வராமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே சிறந்தது!


1 comment: